இன்றைய வாழ்வில் எல்லாவற்றிலும் பிரதானம் பணமே... இதற்காக சக உயிரைக் கொல்லும் அளவுக்கு மனிதனை மாற்றி இருக்கிறது இந்த பணம்... பணத்திற்க்காக என்னவெல்லாம் நடக்கிறது இந்த உலகில்.. எங்கும் ஏமாற்றுக்காரர்கள்... கொலைகள்...கொள்ளைகள்... எல்லாம் பணத்தாலே... அரசியல் மாற்றங்கள்.. அமெரிக்கா வல்லரசானதும் பணத்தாலே...
இந்த பணம் இல்லை என்றால் இந்த உலகில் நீ பிணத்திற்கு சமமாக மதிக்கப்படுவாய்... அதுதான் நடக்கிறது..
தனக்கு சம்பாதித்து வைக்காத தந்தையை கொல்லும் அளவுக்கு மனிதனில் மனதில் குரூரத்தை வளர்த்துள்ளது பணம்...
பெற்ற மகளை விபச்சாரியாக்கும் அளவுக்கு மனதை கல்லாக்கி இருக்கிறது இந்த பணம்..
அடுத்தவனுக்கு சோறில்லை என்றாலும் தனக்கு சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று மனதை மறத்துபோக வைத்திருக்கிறது பணம்...
தாயிற்கு சோறு போட யோசிக்க சொல்லுது பணம்...
தந்தையை பணத்தால் ஏளனம் செய்ய சொல்லுது பணம்.. தூக்கி வளர்த்ததை மறக்கவைத்தது பணம்...
சினேகிதனின் புன்னகைக்கு பணம்...
மனைவியின் சிரிப்பும் பணம்...
எல்லாம் கிடைக்கும் பணத்தால் ஆனால் எதிலும் உண்மை இருக்காது...
Tuesday, December 12, 2006
Sunday, December 10, 2006
யார் பகுத்தறிவாளி...?
கடவுளை வணங்குவன் காட்டுமிராண்டி... இப்படி சொன்னவரின் தொண்டன் இன்று செய்யும் காரியம் என்ன..?
எந்த பிரச்சனையையும் எது சரி தவறு என்று சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவுன்னு நான் நினைக்கிறேன்...
யாரோ சிலையை உடைச்சிட்டாங்ன்னு நீ ஊர்ல இருக்க எல்லா கடவுள் சிலைய உடைச்சா உன்னை நான் எப்படி பகுத்தறிவாளானா எடுத்துகிறது?
இதை நீ யோசிச்சுதுதான் செஞ்சியா?
எனக்கென்னவோ இவங்க வீம்புக்கே கடவுளை எதிர்ப்பதாய் தோன்றுகிறது...
எந்த பிரச்சனையையும் எது சரி தவறு என்று சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவுன்னு நான் நினைக்கிறேன்...
யாரோ சிலையை உடைச்சிட்டாங்ன்னு நீ ஊர்ல இருக்க எல்லா கடவுள் சிலைய உடைச்சா உன்னை நான் எப்படி பகுத்தறிவாளானா எடுத்துகிறது?
இதை நீ யோசிச்சுதுதான் செஞ்சியா?
எனக்கென்னவோ இவங்க வீம்புக்கே கடவுளை எதிர்ப்பதாய் தோன்றுகிறது...
Friday, December 8, 2006
எல்லோரும் ...
எல்லோரும் சிரிக்கிறாங்கன்னு பூனை போய் புறங்கடையில் சிரிச்சுசாம்,... அப்ப்டித்தானுங்க நானும் எல்லாரும் எழுதுறாங்களேன்னு நானும் எழுத வந்துட்டேன்... கொஞ்சம் பொருத்துக்கங்க... ப்ளீஸ்...
ஆயிரம் பேர கொன்னாத்தான் அரை வைத்தியனாம் ஆனா எவ்வளவு எவ்வளவு பேர் அழுதா அரை எழுத்தாளன் சொல்லல..
ஆயிரம் பேர கொன்னாத்தான் அரை வைத்தியனாம் ஆனா எவ்வளவு எவ்வளவு பேர் அழுதா அரை எழுத்தாளன் சொல்லல..
Subscribe to:
Posts (Atom)